கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடமளிக்க வேண்டும்-ரஜினி, ராகுல் காந்தி
"திமுக தலைவரும் முன்னாள் 💺முதல்வருமான கருணாநிதியின் உடலினை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை”, என்று ரஜினி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதே போல் ராகுல் காந்தி அவர்களும், ஜெயலலிதாவிற்கு 🌊மெரினாவில் இடமளித்தது போல், கருணாநிதிக்கும் தமிழக அரசு இடமளிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இதே போல் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் 💺பரூக் அப்துல்லாவும் தமிழுக்காக போராடிய மாபெரும் தலைவர் கருணாநிதியை பொது மக்கள் மற்றும் திமுகவின் கோரிக்கைகளை ஏற்று மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
COMMENTS