பொன்னமராவதியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு சாதனை..
திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை பதின்மப்பள்ளி மாணவர்கள் சாதனை.
தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற இருக்கின்ற தடகளப் போட்டிக்கு பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 2 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு மாணவன் பாரதிசிவா, நீளம் தாண்டுதல் போட்டியில் திருச்சி மண்டல அளவில் முதல் இடம் பிடித்து மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 9ஆம் வகுப்பு மாணவி கீதா, குண்டு எறிதல் போட்டியில் திருச்சி மண்டல அளவில் முதல் இடம் பிடித்து மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். 10ஆம் வகுப்பு மாணவன் ஹரிகரன் வட்டு எறிதல் (Discus) போட்டியில் திருச்சி மண்டல அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த மூன்று மாணவர்களையும், பயிற்சி அளித்து வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் திரு.கதிரேசன் அவர்களையும் பள்ளியின் தாளாளர் முதல்வர் அருட்சகோதரி ச.ம.மரியபுஷ்பம் மற்றும் பள்ளியின் சக ஆசிரியர்கள் அவர்களை பாராட்டி வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தனர்.
திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை பதின்மப்பள்ளி மாணவர்கள் சாதனை.
தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற இருக்கின்ற தடகளப் போட்டிக்கு பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 2 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு மாணவன் பாரதிசிவா, நீளம் தாண்டுதல் போட்டியில் திருச்சி மண்டல அளவில் முதல் இடம் பிடித்து மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 9ஆம் வகுப்பு மாணவி கீதா, குண்டு எறிதல் போட்டியில் திருச்சி மண்டல அளவில் முதல் இடம் பிடித்து மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். 10ஆம் வகுப்பு மாணவன் ஹரிகரன் வட்டு எறிதல் (Discus) போட்டியில் திருச்சி மண்டல அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த மூன்று மாணவர்களையும், பயிற்சி அளித்து வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் திரு.கதிரேசன் அவர்களையும் பள்ளியின் தாளாளர் முதல்வர் அருட்சகோதரி ச.ம.மரியபுஷ்பம் மற்றும் பள்ளியின் சக ஆசிரியர்கள் அவர்களை பாராட்டி வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தனர்.
COMMENTS