காந்தி பிறந்த நாளை முன்னிட்டு
இரத்தவகை கண்டறிதல், இரத்த அழுத்தம், மற்றும் இரத்த சோகை கண்டறியும முகாம்!
புதுக்குளம்
நடைப்பயிற்சியாளர் சங்கம், புதுக்கோட்டை ஆத்மா இரத்த வங்கி மற்றும் சிட்டி ரோட்டரி சங்கம்
இணைந்து புதுக்குளம் வளாகத்தில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்தவகை கண்டறிதல், இரத்த அழுத்தம், மற்றும் இரத்த சோகை கண்டறியும் முகாம்
சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை
அரசு மருத்துவக் கல்லுரி உதவிப் பேராசிரியர், இருதயநோய சிறப்பு மருத்துவர், கே.எம்.நிஜாமுதீன், ரோட்டரி மாவட்டத்தின் 2020-21 ஆண்டு ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினர்;களாக கலந்து கொண்டு முகாமினை துவக்கிவைத்தார்.
புதுக்குளம்
நடைப்பயிற்சியாளர்கள் சங்கத் தலைவர். க.நைனாமுகமது, சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு நலச் சங்கத் தலைவர்
கண.மோகன்ராஜ், புதுக்குளம்
நடைப்பயிற்சியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன், ஆத்மா இரத்த வங்கியின் மேலாளர் பழனி, வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.கதிரேசன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வருகை
புரிந்த அனைவரையும் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் வரவேற்றார். நிகழ்ச்சியில்
சி.தனகோபால், வழங்கறிஞர்.
ஏ.சந்திரசேகரன், இராம செல்வராசு, வங்கி மேலாளர் அன்பழகன், ஆரோக்கியசாமி,
நடராசன், மாவட்ட கல்வி அலுவலர் கு. திராவிடசெல்வம் மற்றும் நடைப்பயிற்சி
மேற்கொண்ட பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
காந்தி
செயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவி;த்து மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக பொருளாளர் பி.அசோகன் நன்றி கூற
விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS