உலக போலியோ தின மனித சங்கிலி
உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போலியோ விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வி.என்.சீனிவாசன், துணை ஆளுநர் ஆர்.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் பெட்லராணி வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித சங்கிலியினை தொடங்கி வைத்தார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “ரோட்டரியின் சேவையால் போலியோ நோய் காலியானது” என்ற தலைப்பில் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் முதல் பெண்மணி பவானி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் சுமார் ஆயிரம் மாணவிகள் போலியோ விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் வள்ளியம்மை சுப்ரமணியன், பானுமதிகண்ணன், ராணிரோஸ்லின், குப்பாள் நாகப்பன், சுபா கருணாநிதி, கருணைச் செல்வி, கலாவதி, மீனு கணேஷ், சுசீலா, கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வித்யா சிவா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம், அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போலியோ விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.வி.என்.சீனிவாசன், துணை ஆளுநர் ஆர்.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் பெட்லராணி வரவேற்றார். மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித சங்கிலியினை தொடங்கி வைத்தார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர்.கே.எச்.சலீம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “ரோட்டரியின் சேவையால் போலியோ நோய் காலியானது” என்ற தலைப்பில் மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் முதல் பெண்மணி பவானி சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் சுமார் ஆயிரம் மாணவிகள் போலியோ விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் வள்ளியம்மை சுப்ரமணியன், பானுமதிகண்ணன், ராணிரோஸ்லின், குப்பாள் நாகப்பன், சுபா கருணாநிதி, கருணைச் செல்வி, கலாவதி, மீனு கணேஷ், சுசீலா, கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வித்யா சிவா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS