சர்வதேச போலியோ தின கொண்டாட்டம்
சர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மஹாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போலியோ நோய் வழியனுப்பும் விழா பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் முதல்வர் எஸ்.ராமர் வறவேற்றார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், கவிஞருமான தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கிய ரோட்டரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கிவைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் ஜி.தனகோபால், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், என்.வேலுச்சாமி, வி.கார்த்திகேயன், வித்யா சிவா, ராணி ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலியோ விழிப்புணர்வு உறுதிமொழியினை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆர்.எம்.துரைமணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
சர்வதேச போலியோ தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம், மஹாராணி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் போலியோ நோய் வழியனுப்பும் விழா பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் முதல்வர் எஸ்.ராமர் வறவேற்றார். மக்கள் நன்மதிப்பு இயக்குனர் டாக்டர் கே.எச்.சலீம், மாவட்ட மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், கவிஞருமான தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கிய ரோட்டரிக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தை துவங்கிவைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி, தொழிற்பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் ஜி.தனகோபால், செயலாளர் கே.என்.செல்வரத்தினம், என்.வேலுச்சாமி, வி.கார்த்திகேயன், வித்யா சிவா, ராணி ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போலியோ விழிப்புணர்வு உறுதிமொழியினை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆர்.எம்.துரைமணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS