நெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா புயல் நிவாரண நிதியாக செல்கிறது தமிழக அரசுக்கு...
பொன்னமராவதி நவ-28
பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி ஆரம்ப பள்ளி மாணவர்களின் சேமிப்பு பணம் கஜா புயல் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தங்களது சஞ்சாயிக சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் சேர்த்து வந்த பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு கொடுக்க முன்வந்தனர். அருகிலுள்ள குழிபிறை அஞ்சல் அலுவலகத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாணவர்கள் சஞ்சாயிக மூலம் சேர்த்த ரூ. 1652 ஐ அனுப்பி வைத்தனர். கஜா புயல் பாதிப்பால் பல்வேறு கட்சி, தொழிற்துறை நிறுவனங்கள் சார்பிலும் நிவாரணப்பொருட்கள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் நெய்வேலி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள் தங்களது சஞ்சாயிக சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் குருவி சேர்பதைப்போல் சேர்த்து வைத்த பணத்தை அஞ்சல் துறை மூலம் கஜ்அஅ புயல் தமிழக அரசு நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தது அப்பகுதியில் வாழ் பொதுமக்களின் பாராட்டுக்கூறியதாக கருதுகின்றனர். இந்த செயலை பார்த்த பொதுமக்கள் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் அந்த மானவர்கள் வெகுவாக பாராட்டினர்.
📗📨📺📹📸📞☎
படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை #மாவட்டம்
#பொன்னமராவதி #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.
#ILAYARAJA #KEERAVANI
COMMENTS