பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஆலவயல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஆலவயல் அரசு பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமராவதி ராயல் லயன்ஸ் கிளப் சார்பில் ஆலவயல் அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் நிலவேம்பு கசாயம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ராயல் லயன்ஸ் கிளப் தலைவர் பழனியப்பன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் புகேஷ், மாவட்ட தலைவர்கள் பாபு, அன்புசெல்வன், கார்த்திகேயன் துணை தலைவர் பாலக்கிருஷ்ணன் உறுப்பினர்கள் சரவணன், முருகானந்தம், பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
COMMENTS