பொன்னமராவதி டிச-6
பொன்னமராவதி சிவன்கோவில் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள சிவன் கோவில் எதிர்புறம் குப்பைகள் நிறைந்து மிகவும் அசுத்தமாக துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது. அந்த இடத்தினை சுத்தப்படுத்தி அந்த இடத்தில் மண் அடித்து கோவில் பூஜைக்கு உகந்த வில்வம், வன்னி, உத்திராட்சம், நாகலிங்கம், மகிழம், கடம்பை, செண்பகம், நந்தியாவட்டை, இலுப்பை, பவளமல்லி, அரளி, நாவல் உட்பட 15 வகையான மர மற்றும் பூச்செடிகள் நடும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா அம்பலகாரர் அவர்கள் தலைமை வகித்தார். ராம.சேதுபதி அம்பலகாரர் முன்னிலை வகித்தார். மரம் நடுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் மாறன், காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், மனோகரன், அ.செ.அன்கோ உரிமையாளர் நாச்சியப்பன், ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளர் மணிகண்டன், நாட்டுக்கல் மணி, பொறியாளர் பழனியப்பன், நந்தினி பாஸ்கர், முருகன் ஜூவல்லரி உரிமையாளர் மோகன், வெள்ளைச்சாமி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரங்களை நட்டனர்.
COMMENTS