பொங்கல் பரிசு ரூ.1,000 பெற காலக்கெடு நீட்டிப்பு
பொங்கலுக்கு முன்னதாக வெளியூர் சென்றவர்கள், பல்வேறு காரணங்களால் உரிய நேரத்தில் வாங்க முடியாதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறும்போது, ‘‘பொங்கலுக்கு முந்தைய நாளில்வாங்க முடியாதவர்கள், வெளியூர்களுக்கு முன்னதாகவே வந்தவர்கள், வெளியூர்களில் இருந்துபொங்கலன்று ஊருக்கு வரும்போது நியாயவிலைக் கடை இல்லாததால் வாங்க முடியாதவர்கள் என தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் பரிசை வாங்க முடியாதவர்கள், பொங்கலுக்கு பின்னரும் உரிய ஆதாரங்களைக் காட்டி பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.
COMMENTS