அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்...
வாஷிங்டன்: அமெரிக்காவின் மூன்று முக்கிய பதவிகளில், அமெரிக்க வாழ் இந்தியர்களை நியமிக்க, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அரசின் முக்கிய பதவிகளில், 30க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களை, அந்நாட்டு அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். தற்போது, அமெரிக்காவின் அணு சக்தி துறையின் உதவி செயலர் பதவிக்கு, ரீடா பாரன்வால், தனியுரிமை மற்றும் சிவில் உரிமைகளுக்கான மேற்பார்வை வாரிய உறுப்பினராக, ஆதித்யா பம்சாய் மற்றும் கருவூல உதவி செயலராக, பிமல் படேலை நியமிக்க, அதிபர் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். அதிபரின் பரிந்துரை, செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினராக, அமெரிக்க வாழ் இந்தியரும், ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினருமான, ராஜா கிருஷ்ணமூர்த்தி, 45, நியமிக்கப்பட்டுள்ளார். ராஜா கிருஷ்ணமூர்த்தி, 3 மாத குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை, குடும்பத்துடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறினர். மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பின், சட்டம் பயின்ற, ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலியானாஸ் மாகாண செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
COMMENTS