30 வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னேற்பாடு கூட்டம்
வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக வருகின்ற 4.2.2019 முதல் 10.2.2019 வரை நடைபெற உள்ள சாலை பாதுகாப்பு வாரவிழா நடத்துதல் முன்னேற்பாடு குறித்த கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் ப.செந்தாமரை முன்னிலை வகித்தார் கூட்டத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், போக்குவரத்து கிளை மேலாளர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாமஸ் ராஜன், அனைத்து ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
COMMENTS