நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 90-வது பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் டாக்டர்.சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா, மாநாடு மற்றும் 25-வது ஆண்டு வெள்ளிவிழா தலைவர் ஏ.சுப்பையா தலைமையில் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, பேச்சு, நடனம் கட்டுரை, பாட்டு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நகரத் தலைவர் பி.அசோகன் வரவேற்றார். குழந்தைகள் நலமருத்துவர் ராம்தாஸ், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.ஆறுமுகம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள். மாணவ, மாணவிகளை வாழ்த்தி கவிஞர்.ஜீவி வாழ்த்துரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 740 மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆர்.வெங்கடேசன், வழக்கறிஞர் வாகை.எம்.சேகர், காவல் ஆய்வாளர் எஸ்.பன்னீர்செல்வம், ஓவியர்.ஆறுமுகம், வி.பழனியப்பன், எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன், எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் மொத்தம் சுமார் 850 பேர் கலந்து கொண்டனர். விழாவினை புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கதலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தொகுத்து வழங்கினார். நிறைவாக கவிஞர்.புதுகை புதல்வன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் டாக்டர்.சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்தநாள் விழா, மாநாடு மற்றும் 25-வது ஆண்டு வெள்ளிவிழா தலைவர் ஏ.சுப்பையா தலைமையில் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, பேச்சு, நடனம் கட்டுரை, பாட்டு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நகரத் தலைவர் பி.அசோகன் வரவேற்றார். குழந்தைகள் நலமருத்துவர் ராம்தாஸ், சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்க தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ், மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.ஆறுமுகம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம் விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள். மாணவ, மாணவிகளை வாழ்த்தி கவிஞர்.ஜீவி வாழ்த்துரை வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 740 மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆர்.வெங்கடேசன், வழக்கறிஞர் வாகை.எம்.சேகர், காவல் ஆய்வாளர் எஸ்.பன்னீர்செல்வம், ஓவியர்.ஆறுமுகம், வி.பழனியப்பன், எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன், எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் மொத்தம் சுமார் 850 பேர் கலந்து கொண்டனர். விழாவினை புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கதலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தொகுத்து வழங்கினார். நிறைவாக கவிஞர்.புதுகை புதல்வன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS