👉 👉 தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'....
திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்த, 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பட்டியலில், நிறைய தவறுகள் இருந்ததால், புதிய பட்டியலை தயாரிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
'கேரளாவிலுள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 - 50 வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற பெண்கள், கள்ள பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு கேட்டு, இந்த பெண்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, சபரிமலையில், 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, மாநில அரசு சார்பில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதில், பல குளறுபடிகள் இருந்தன. அந்தப் பட்டியலில், சில ஆண்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சில பெண்களின் வயது குறைத்து காட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து, புதிய பட்டியல் தயாரிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது
COMMENTS