கொடையாளர்களுக்கு பாராட்டு
பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி அளித்த கொடையாளர்களுக்கு
பன்னாட்டு ரோட்டரி சார்பாக கொடையாளர் பின் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா மக்கள்
நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ் தலைமையில் சரவணபவன் ஹாலில்
நடைபெற்றது. முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க
உடனடி தலைவர் எஸ்.பார்த்திபன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம்
அ.லெ.சொக்கலிங்கம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் ரோட்டரி மாவட்டம் 3000ன் உடனடி மாவட்ட ஆளுநர் ப.கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு புதுக்கோட்டை
மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்
வி.என்.சீனிவாசனுக்கு பெருங்கொடையாளர் பின் அணிவித்து சான்றிதழ் வழங்கினார.;
மேலும் திருமயம் ரோட்டரி சங்கத் தலைவர்
எ.சொக்கலிங்கம், திருமயம் சென்டினரி பெல் சிட்டி
ரோட்டரி சங்கத் தலைவர் என்.குமரேசன் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர்
சி.பழனியப்பன், செயலாளர் வி.கார்த்திகேயன் உடனடி
முன்னாள் தலைவர் எஸ்.ரமேஷ் கொடையாளர் (இரண்டாவது லெவல்) எஸ்.ராம்குமார்
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் டி.எச்.ராஜேந்திரன், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் என்.சுப்பிரமணியன்,
பி.அசோகன் ஆகியோருக்கு கொடையாளர் விருது
மற்றும் பின் அணிவித்து பேசும் போது நீங்கள் பெருங்கொடையாளராக வளர வாழ்த்துகிறேன்
என்றார். நிகழ்ச்சியில் பட்டயத்தலைவர் க.நைனாமுகம்மது, ஜி.தனகோபால், கே.என்.செல்வரெத்தினம், எஸ்.தங்கமணி 2017-2018 ஆம் ஆண்டின் மாவட்ட செயலாளர்
எல்.சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
COMMENTS