04.01.2019 மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மாபெரும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ மாணவிகள் வருங்காலத்தில் பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிப்போம் என்றும்,100% பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,இயற்கை வளம் காப்போம் என்றும் கோஷமிட்டனர் ,இந்த பேரணியில் ரோட்டரி சங்க தலைவர் திரு .அபுபக்கர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராமு மற்றும் கிராமத்தார்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் முற்றிலும் இயற்கையான முறையில் உருவாக்கிய பையை கடைவீதிகளில் வழங்கினர், பேரணியில் சுமார் 300 மாணவர்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு பதாகைகளுடன் மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது.







COMMENTS