வெப்பம் குறைந்தது ஏன்?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
மார்ச் மாத தொடக்கத்தில், தமிழகம் நோக்கி கிழக்கு திசைக் காற்று வீசவில்லை. மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வறண்ட காற்று தமிழகம் நோக்கி வீசியது. அதன் காரணமாக சுமார் 10 நகரங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவியது. தற்போது பகல் நேரத்தில் கிழக்கு திசைக் காற்று பலமாக வீசி வருகிறது. அதன் காரணமாக பல நகரங்களில் வெப்பநிலை குறைந்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, கரூர் பரமத்தி, சேலத்தில் 100 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில், இதற்கு முன்பு 96 டிகிரி வரை உயர்ந்த வெப்பநிலை, நேற்று 91 டிகிரியாக குறைந்திருந்தது. மாலத்தீவு முதல் குமரிக்கடல் வரை காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
COMMENTS