👉👉தாம்பரம் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
சென்னை: சென்னை தாம்பரம் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். நன்மங்கலம் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அருகில் இருக்கும் ஜெயேந்திர நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சி திணறல் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் பொது மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் எண்ணற்ற மரங்கள் எரிந்து சேதமாகியது குறிப்பிடத்தக்கது.
COMMENTS