மேட்டூர் அணையில் கதவணைப்பு பராமரிப்பு பணிகள் தீவிரம்
எதிர்வரும் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு மேட்டூர் அணையில் கதவணைகள் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் .
தண்ணீர் திறக்க மேட்டூர் அணையின் வலது கரையில் 5 கண் மதகுகளும் 8 கண் மதகுகளும், மற்றும் அணையின் இடது கரையில் 16 கண் மதகுகளும் உள்ளன.
அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழே குறையும் போது 5 கண் மதகுகள் வழியாகவும்,50 அடிக்கு மேலே உள்ள போது 8 கண் மதகுகள் வழியாகவும்,100 அடிக்கு மேலே போகும் போது 16 கண் மதகு வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்படும் .
இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக பிப்ரவரி முதல் மே வரை கதவணைகள் வருடாந்திர பராமரிப்பு செய்யப்படும்.
அதன்படி 20 -க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை பணியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் மதகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிகள் அடுத்த மாத இறுதியில் நிறைவு பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
COMMENTS