தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி; மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு!
*தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
*அமெரிக்காவை சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி மற்றும் சுப்ரானே தெப்பெட் இருவரும் பிட் காயினில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளனர். கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் பொருட்டு தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.*
*ஆனால், உரிய அனுமதியை பெறாமல் தாய்லாந்து நாட்டின் இறையான்மையை மீறி கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
COMMENTS