பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
தற்போது, எம்.பி.,யாக உள்ள, 41 பெண்களில், 28 பேர், மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சோனியா, ஹேமமாலினி உள்ளிட்டோர், இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
பதவிக்காலம் முடிவடையவுள்ள, 16வது லோக்சபாவில், 41 பெண்கள், எம்.பி.,யாக உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பா.ஜ.,வின் ஹேமமாலினி, மேனகா, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். இதில், 16 பேர், தற்போதைய தேர்தலில், தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட்டனர். மேலும் சிலர், தொகுதி மாறி போட்டியிட்டனர்.
நேற்று, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், போட்டியிட்ட பெண், எம்.பி.,க்களில், சோனியா, கிரண் கெர், மேனகா, டிம்பிள் யாதவ் உட்பட, 28 பேர், மீண்டும் வெற்றி பெற்று உள்ளனர்.
COMMENTS