புகை போதை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி!!
பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்தியாலயத்தின் சார்பில் அகில உலக புகையிலை ஒழிப்பு தின கண்காட்சி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது காலை ஒன்பது முப்பது மணிக்கு துவங்கியது இக்கண்காட்சியை குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ராமதாஸ், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர் மருத்துவர் ராமதாஸ் பேசும்போது தினமும் ஆயிரக்கணக்கில் புகைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் போதை பழக்கவழக்கங்களால் மனிதர்கள் இறக்கின்றனர் இந்த விழிப்புணர்வின் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்பிடிப்பது, மற்றும் போதை பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் மேலும் மோகன்ராஜ் பேசும்போது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பல நச்சுப் பொருட்கள் சிகரெட்டில் கலந்திருக்கின்றன இது குடிப்பவர்களுக்கு மட்டுமின்றி அருகில் இருப்பவர்களுக்கும் அதிகம் பாதிக்கின்றது என்றார் மருத்துவர் ராமமூர்த்தி பேசுகையில் ஒரு மனிதன் தன்னிடம் பலம் இல்லாத காரணத்தினால் தான் இந்த வகையான புகைப்பிடிப்பது மற்றும் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகின்றனர் இதிலிருந்து விடுவதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு கண்காட்சி அவசியம் கண்காட்சியில் உள்ள அனைத்து சித்திரங்களுக்கான பட விளக்கத்தை நிலையத்தின் பொறுப்பாளர் பி .கு. பாலாஜி எடுத்துரைத்தார் கவிநாடு ஊராட்சி ஒன்றியமுன்னாள் தலைவர் இராஜசேகர், விஜயன் ,கணபதி, சத்தியசீலன், ராம்குமார், வனிதா, வைரக்கண்ணு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது
COMMENTS