*புனைப்பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி காதலர்களாய் சந்தித்த கணைவன்-மனைவி: பிரிந்த குடும்ப வாழ்க்கை
_உபியின் மேற்குப்பகுதி அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது._
_கணவன், மனைவி இருவருமே புனைபெயரில் புது புது முகநூல் கணக்கு தொடங்கி, போலி புகைப்படங்கள் பதிந்து அவ்வப்போது புதிய நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளனர்._
_இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்புரையாடல், கண்மூடித்தனமான காதலாக மாறியது. உருவானது. முகநூலிலேயே ஒருவருக்காக மற்றொருவர் உயிரை கொடுக்கவும் உறுதிமொழி ஏற்றனர்._
_தம் காதலின் அடுத்த கட்டமாக நேரில் சந்திக்க முடிவு செய்து, கடந்த ஞாயிறன்று அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதிக்கு வந்துள்ளனர்._
_வந்த இடத்தில் பரஸ்பரம் சந்தித்த இருவருக்கும் பேரதிர்ச்சி. உணவு விடுதியிலேயே கணவன்-மனைவிக்குள் சண்டை முற்றி இருவரும் பிரிந்து சென்றனர்._
_பின் இரு கிராம பஞ்சாயத்தாரும் கூடி பேசியும் இருவருக்குள்ளும் சமாதானம் ஏறபடாததால், கணவன்-மனைவி தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர்._
COMMENTS