புதுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மன்னர் கல்லூரி சாலை ஓரங்களில் உள்ள அரசு சுவர்களில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழமை வாய்ந்த தத்துவங்கள் மகாத்மா காந்தி அப்துல் கலாம் ஆகியோரின் சிறப்பான ஓவியங்களை கல்லூரி நிர்வாகம் சுவர்களில் வரைந்து வைத்துள்ளனர் ஆனால் இதனை மறைக்கும் விதமாக சாலை ஓரங்களில் சுவற்றை மறைத்து தர கடைகள் போட்டிருந்தனர் அதுமட்டுமல்லாமல் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் தரைக்கடைகள் அதிகமாக போடப்பட்டு இருந்தது இதனால் சமூக ஆர்வலர்கள் இந்த ஓவியங்களை யாருக்கும் தெரியாத அளவிற்கு கடைகளை வைத்துள்ளனர் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர் இதன்படி இன்று நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணியன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்போது ஒரு கடையில் டயர்களை வெளியே அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தனர் அந்த டயர்களை நகராட்சி ஆணையர் எடுத்தபொழுது டயர்களில் ஏகப்பட்ட தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் சூழ்நிலை இருந்தது இதனால் டயர்களை உடனடியாக அங்கிருந்து அகற்றி எடுத்துச் சென்றனர் துப்புரவு ஊழியர்கள் இதனால் கடைக்காரருக்கும் நகராட்சி ஆணையருக்கு சிறிது தகராறு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது டயர்களை மழை நேரங்களில் வெளியே அடுக்கி வைப்பதால் டெங்கு கொசுவை உருவாகும் இதனால் காய்ச்சல் பரவும் அதனால் டயர்களை வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறி அதனை அகற்றி எடுத்துச் செல்கிறோம் என்று எடுத்துச் சொல்லிய பிறகு கடைக்காரர் அமைதியானார்
COMMENTS