தங்கள் பரிசுகளை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணை அறக்கட்டளை
l திருச்சி
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையம் வழியாக தினசரிச் செய்திகளை ஒலி வடிவில் அளிப்பதுடன் தமிழ் தொடர்பான பல தரமான பதிவு களையும் அளித்து வருகிறது நற்றிணை அறக்கட்டளை.
மாணவர்களின் தனித் திறமையை ஊக்குவித்து அடுத்த தலைமுறையை வளமாக்கு வதற்கான முயற்சியை தற்போது கையில் எடுத்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக “நற்றிணையின் வெற்றிப்படிகள்” என்ற நிகழ்ச்சியை அறிமுகப் படுத்தியுள்ளது.
மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் காணொளியைப் பதிவு செய்து நற்றிணை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கலாம்.
தகுதியுள்ள காணொளிகள் ஒளி, ஒலி அமைப்புகளைச் சரிசெய்து நற்றிணையின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தினமும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தெளிவான உச்சரிப்புடன், மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். உதவியாளர் பெயரும் வெளியிடப்படுகிறது.
மழலையர் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். பேச்சு தவிர தங்களது திறமையை வெளிப் படுத்தும் பிற காணொளிகளும் வெளியிடப்படுகின்றன.
www.natrinai.org என்ற இணையதளத்தில் உள்ள நூல்களில் தாங்கள் விரும்பியவற்றை பரிசாக மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் காணொளி கள் மட்டுமே வெளியிடப்படும்.
மாணவர் பெயர், வகுப்பு, அலைபேசி எண், உதவியவர் பெயர், பள்ளி முகவரி, தேர்வு செய்த நூல் வரிசைஎண் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு காணொளிப் பதிவினை இணைத்து natrinaihelpcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
9787734166 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவும் அனுப்பலாம்.
மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மாணவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள நல் உள்ளங்கள் நற்றிணை அறக்கட்டளைக்கு அளித்துவரும் நன்கொடை மூலமாகவே இது சாத்தியமாகிறது என்கிறார் இதன் நிறுவனர். நற்றிணை இணைய தளத்திலுள்ள நன்கொடை என்ற பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறக் கட்டளையின் வங்கிக் கணக்கில் விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை செலுத்தலாம் என்றும் கூறுகிறார்.
படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல என்று புரிந்து கொண்ட மாணவர்கள், தமிழர் திருநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட “விழாக்கால வெற்றிப் படிகள்” என்ற நிகழ்ச்சிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பி யிருந்தார்கள்.
அதிலிருந்து ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 1000 பரிசும், திருச்சி மனிதம் அறக்கட்டளை வழங்கிய புத்தகங்கள், குறுந்தகடுகள் ஆகியவையும் பரிசுகளாக அனுப்பி வைக்கப்பட்டன.
மாணவர்களின் நேரத்தை வீணாக்கும் மென்கருவியாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தொடுகருவியாகவும் பார்க்கப்படும் அலைபேசியை பயனுள்ள வகையில் மாற்றியிருக்கும் நற்றிணை அறக்கட்டளையின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் நற்றிணை அறக்கட்டளை
l திருச்சி
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையம் வழியாக தினசரிச் செய்திகளை ஒலி வடிவில் அளிப்பதுடன் தமிழ் தொடர்பான பல தரமான பதிவு களையும் அளித்து வருகிறது நற்றிணை அறக்கட்டளை.
மாணவர்களின் தனித் திறமையை ஊக்குவித்து அடுத்த தலைமுறையை வளமாக்கு வதற்கான முயற்சியை தற்போது கையில் எடுத்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக “நற்றிணையின் வெற்றிப்படிகள்” என்ற நிகழ்ச்சியை அறிமுகப் படுத்தியுள்ளது.
மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் காணொளியைப் பதிவு செய்து நற்றிணை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கலாம்.
தகுதியுள்ள காணொளிகள் ஒளி, ஒலி அமைப்புகளைச் சரிசெய்து நற்றிணையின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
தினமும் வெளியிடப்படும் பதிவுகளுக்கு நற்றிணை அறக்கட்டளை வழங்கும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பேச்சுக்கான தலைப்பை மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தெளிவான உச்சரிப்புடன், மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் கருத்துள்ள பேச்சாக இருத்தல் வேண்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காணொளியைப் (Video) பதிவு செய்யலாம். உதவியாளர் பெயரும் வெளியிடப்படுகிறது.
மழலையர் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். பேச்சு தவிர தங்களது திறமையை வெளிப் படுத்தும் பிற காணொளிகளும் வெளியிடப்படுகின்றன.
www.natrinai.org என்ற இணையதளத்தில் உள்ள நூல்களில் தாங்கள் விரும்பியவற்றை பரிசாக மாணவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் காணொளி கள் மட்டுமே வெளியிடப்படும்.
மாணவர் பெயர், வகுப்பு, அலைபேசி எண், உதவியவர் பெயர், பள்ளி முகவரி, தேர்வு செய்த நூல் வரிசைஎண் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு காணொளிப் பதிவினை இணைத்து natrinaihelpcenter@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
9787734166 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாகவும் அனுப்பலாம்.
மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மாணவர்களின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள நல் உள்ளங்கள் நற்றிணை அறக்கட்டளைக்கு அளித்துவரும் நன்கொடை மூலமாகவே இது சாத்தியமாகிறது என்கிறார் இதன் நிறுவனர். நற்றிணை இணைய தளத்திலுள்ள நன்கொடை என்ற பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறக் கட்டளையின் வங்கிக் கணக்கில் விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை செலுத்தலாம் என்றும் கூறுகிறார்.
படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல என்று புரிந்து கொண்ட மாணவர்கள், தமிழர் திருநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட “விழாக்கால வெற்றிப் படிகள்” என்ற நிகழ்ச்சிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பி யிருந்தார்கள்.
அதிலிருந்து ஐந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 1000 பரிசும், திருச்சி மனிதம் அறக்கட்டளை வழங்கிய புத்தகங்கள், குறுந்தகடுகள் ஆகியவையும் பரிசுகளாக அனுப்பி வைக்கப்பட்டன.
மாணவர்களின் நேரத்தை வீணாக்கும் மென்கருவியாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் தொடுகருவியாகவும் பார்க்கப்படும் அலைபேசியை பயனுள்ள வகையில் மாற்றியிருக்கும் நற்றிணை அறக்கட்டளையின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
COMMENTS