தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைவு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசரேஷன் பொருட்கள் வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும்
தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும்
தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்
சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாதம் அவகாசம் தேவை
டிசம்பர், ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும்
-மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கோரிக்கை.
COMMENTS