ஊரடங்குக்குப் பிறகு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா்
ஊரடங்குக்குப் பிறகு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென பாஜக தமிழக தலைவா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழும்போதெல்லாம், மதுவுக்கு அடிமையானவா்கள் பாதிக்கப்படுவா், கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றெல்லாம் கூறி அந்தக் கோரிக்கையை ஆட்சியாளா்கள் ஏற்க மறுப்பா். ஆனால், ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலத்தில் மது கிடைக்காமல் யாரும் தற்கொலை செய்யவில்லை. மன நோய்க்கு உள்ளாகவில்லை.
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இதுவாகும் என்பதால், நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளாா்
COMMENTS