தினம்தினம் சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பு....ஏன்..?? எதனால்..??
சென்னையில் 5 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் 4 நாட்கள் முன்பு தமிழக அரசு விடுத்த 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவின் விளைவே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழக அரசு இந்த முழு ஊரடங்கு உத்தரவினால் பாதிப்பு குறையும் என்ற எண்ணத்தில் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், பொதுமக்கள் இந்த அறிவிப்பால் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மார்க்கெடில் காய்கறிகள் வாங்கப்போய் கொரோனாவை வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. இதில் பச்சிளம் குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்த முழு ஊரடங்கு முடிவை எடுப்பதற்கு முன்பு தமிழக அரசு சில நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் இந்த நிலைமை மாறி இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
COMMENTS