புதுச்சேரி:
கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16,435 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சாலைகளில் சுற்றிய 1,397 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் ஊரடங்கை மீறியதற்காக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.4 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்கம் மூலம் காணொளி காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாணவர்கள் கேட்ட 110 கேள்விகளுக்கு ஆசிரியர் விளக்கங்கள் அளித்தனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
COMMENTS