சென்னை , மே.29 –
காரில் தங்கக்கட்டிகளைக் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநின்றவூர் போலீசார் நேற்றிரவு வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.அங்கு வந்த ஒரு காரில் சோதனை செய்தனர். அக்காரிலிருந்த 5 கிலோ 847 கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றைக் கடத்தி வந்த ஆவடியைச் சேர்ந்தபாபு சங்கர் வயது 38 , ஜதேந்தர்குமார் வயது 45 , பழைடய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ராகேஷ் மேத்தா வயது 25 ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.
COMMENTS