தேசியளவில் தமிழ்நாட்டின் சிறந்த கிராம ஊராட்சியாக புதுக்கோட்டை மாவட்டம் அம்புகோவில் கிராம ஊராட்சியும் மத்திய அரசின் "தீனதயாள் உபாத்யாய கிராம விருதிற்காக(DDUPSP)" தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கிராம மேலாண்மை மையம் சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, குடிநீர், மருத்துவம், தனிநபர் கழிப்பறை, மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும், சிறந்த மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளை தேர்வுசெய்து தீன தயாள் உபாத்யாய கிராம விருதினை வழங்கி வருகிறது.
இதனடிப்படையில் தேசியளவில் தமிழ்நாட்டின் சிறந்த கிராம ஊராட்சியாக அம்புகோவில் கிராம ஊராட்சியும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை - கறம்பக்குடி செல்லும் சாலையில் கறம்பக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது அம்புகோவில் கிராம ஊராட்சி.
COMMENTS