தேவை வேகமான நடவடிக்கை...
மெத்தனம் கொரோனா நோய்த்தொற்று பரவலையே அதிகரிக்கும்...!
- சென்னையில் மாநகராட்சி , அரசு பொதுமருத்துவமனை மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் பாசிட்டிவ் என தெரியும் நிலையில் அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனை , மருத்துவமனையில் அனுமதிப்பது அல்லது தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையால் மிகத் தாமதம் ஆகின்றது. பரிசோதனை மேற்கொள்ளும் போதே இணையத்தில் பதிவு செய்வதும் நெகடிவ் அல்லது பாசிட்டிவ் என்பதை உடனுக்குடன் அப்லோட் செய்யவேண்டும்.ஆனால் இது நடப்பதில்லை
- அதிக வேலைப்பளு , ஆட்கள் குறைவு என காரணங்களால் பாசிட்டிவ் ஆனவர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தாமதமாவது பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சளுக்கு ஆளாவதில் இருந்து , என்ன செய்வது என் தெரியாமல் அங்குமிங்கும் அலைவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கிறது . இதை தடுக்க - பிரச்சினையை சீர் செய்ய வேகமான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது சார். அதிகளவில் ஆட்களை வைத்துக்கொண்டு தேவைப்படும் நிலையில் 24/7 மருத்துவ பரிசோதனை முகாம்களை கூட நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
- இதைச் செய்யாமல் கொரோனா பரவலை தடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லை .
- கா. அசுதுல்லா தேசியச் செயலாளர் இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்.
COMMENTS