தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கபசுர கசாயம்..
பொன்னமராவதி :-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனை, பொன்னமராவதி பேரூராட்சி, லயன்ஸ் சங்கம்,லயன்ஸ் கல்வி அறக்கட்டளை, ஆகியவை இணைந்து பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். இம்முகாமினை பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா அம்பலகாரர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் இம்முகாமிற்கு மூலிகை மருந்துகள் தயாரித்து வழங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, அரசு தலைமை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி, சித்த மருத்துவர் தாமரைச்செல்வன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சதாசிவம்,பாஸ்கரன், சண்முகம், இளங்கோவன், பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படங்கள் மற்றும் செய்திகள்
கீரவாணி அழகுராஜா
நிருபர்
பொன்னமராவதி
COMMENTS