சென்னையில் இருந்து வரும் வாகன கொரியர் (Courier)ஓட்டுநர்களால் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சம்
புதுக்கோட்டை பெரியார் நகர் RTO அலுவலக ரோட்டில் செயல்பட்டு வரும். ST கொரியருக்கு தினமும் சென்னையில் இருந்து பார்சல் லாரி வருகின்றது அதன் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை, இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து பார்சல் எடுத்துச் செல்கின்றனர் மேலும் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பார்சல் அனுப்பப்படுகிறது, நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் இந்த நேரத்தில் தினமும் சென்னையில் இருந்து வரும் வாகனம் மற்றும் ஓட்டுநர்களால் நோய் தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்
COMMENTS