மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு
தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் ஜூலை 7ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு (ஜூலை 12ம் தேதி வரை) நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்யாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழுவில் இணைய: t.me/whatsappusefullmessages
COMMENTS