கர்ப்பிணி பெண்களுக்கான இலவச இரத்தசோகை கண்டறிதல் முகாம்!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் SKமருத்துவமனை இணைந்து நடத்தும் கர்ப்பிணி பெண்களுக்கான இலவச இரத்தசோகை கண்டறிதல் முகாம் சங்கத் தலைவர் டாக்டர் க. ஆறுமுகம் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது ரோட்டரி பிரார்த்தனையை செல்வரத்தினம் வாசித்தார் நிகழ்ச்சியில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஆ.மாலதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கான இலவச இரத்தசோகை கண்டறிதல் முகாமினை துவக்கி வைத்தார் முகாமில் மேனாள் துணை ஆளுநர் சோ. பார்த்திபன், பட்டய தலைவர் க.நைனா முஹம்மது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் S.செந்தில்வேல், V.செல்வம், N.ராஜா, P.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து நடத்தப்பட்டது நிறைவாக சங்கச் செயலாளர் P.செல்லத்துரை நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
COMMENTS