பிரதமரின் திட்டத்தால் இனி ஒருவர் கூட பட்டினி கிடக்கமாட்டார் -அமித் ஷா
நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ,நரேந்திர சிங்தோமர், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் இறுதிவரையிலான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் டிவிட்டரில் பதிவிட்ட அமித் ஷா, பிரதமரின் திட்டத்தால் நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டின் இதரப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் மருத்துவக் குழுவினருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் ஏய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் உயர் மருத்துவ நிபுணர்க்குழுவினர் பங்கேற்றனர்.
நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ,நரேந்திர சிங்தோமர், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் இறுதிவரையிலான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் டிவிட்டரில் பதிவிட்ட அமித் ஷா, பிரதமரின் திட்டத்தால் நாட்டில் ஒருவர் கூட பசியுடன் உறங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டின் இதரப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் மருத்துவக் குழுவினருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் ஏய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் உயர் மருத்துவ நிபுணர்க்குழுவினர் பங்கேற்றனர்.
COMMENTS