ஆகஸ்ட் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு? மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்யும் முதல்வர்
தமிழகம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு (Lockdown) வீதியை ஆகஸ்ட் இறுதி வரை தொடரும் எனத் தகவல்.
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) தலைமையில் வரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிக்க பரிசீலிக்க உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பொது போக்குவரத்து மற்றும் மால்கள் மற்றும் சினிமா அரங்குகள் மீதான தடை நடைமுறையில் தொடர்ந்து இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக மாவட்டங்களில் கோவிட் -19 (COVID-19) பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போதைய ஊரடங்கு காலம் முடிவுக்கு வர உள்ளதால், ஜூலை 31 க்கு பிறகு, ஊரடங்கு காலம் (Lockdown extension in Tamil Nadu) நீட்டிக்கப்படலாம்.
ஆனால் இன்னும் சில தளர்வுகள் அளிக்க பரிசீலிக்கப்படலாம். ஆனால் பொது இடங்கள் அதிகமாக கூடுவது மற்றும் பொது போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் குறைந்தது அடுத்த மாதம் இறுதி வரை இருக்கும் என்று ஒரு மாநில அரசு அதிகாரி கூறினார்.
COMMENTS