பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு மூடைகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமரவாதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் ஊராட்சியை தூய்மை படுத்தவும், நோய் பரவலை தடுக்கும் வகையிலும் ஐந்து மூடை பிளீச்சிங் பவுடர் மற்றும் 20 சுண்ணாம்பு மூடைகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு ராயல் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சங்கச்செயலாளர் ரத்தினம், பொருளாளர் ரமேஷ், துணைச் செயலாளர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேலைச்சிவபுரி ஊராட்சி முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் ஊராட்சி முழுவதும் தெளிக்க பிளீச்சிங் பவுடர் 5 மூடை மற்றும் 20 சுண்ணாம்பு மூடைகள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, சங்க இயக்குநர் கண்ணன், சங்க உறுப்பினர் அர்ஜுனன், ஊராட்சி செயலர் நிறைமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமலை நாகராஜன்
பொன்னமராவதி
COMMENTS