சென்னை:
சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ம் தேதி காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இ பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில் இ பாஸ் ரத்து செய்வது பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் பேசவுள்ளனர். |வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29-ம் தேதி மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 29-ம் தேதி காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இ பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில் இ பாஸ் ரத்து செய்வது பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் பேசவுள்ளனர். |வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
COMMENTS