பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பி.இ படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும் என்று மாணவர் சேர்க்கை செயலர் தெரிவித்துள்ளார்.
ஒரே கட்-ஆப் மதிப்பெண் கொண்ட பலரை வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் என்று மாணவர் சேர்க்கை செயலர் கூறியுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் சேர்க்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கைக்கு தேர்வாகியுள்ளவர்கள் கல்லூரி இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி உறுதி செய்யலாம்.
கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் நாளில் அசல் சான்றிதழை சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம்.
வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் www.tngasa.in இல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் அளித்துள்ளார்.
COMMENTS