நாளும் ஒரு நாலடியார்
செய்யுள்; 350
கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.
விளக்கம்;
குண்டை - குண்டாக உள்ள எருது
அறுத்துக்கொண்டு வந்த புல்லைக் கொடுத்து,
உடம்பை நன்றாகத் தேய்த்துவிட்டு
வளர்த்தாலும்
சிறிய உருவம் கொண்ட குண்டு-எருது
தேரில் பூட்டுவதற்கு உதவாது.
ஐயனே, கேள்.
செல்வம் படைத்திருந்தாலும்
கீழ்மக்களை
அவர்களின் செயலால் கண்டுகொள்ளலாம்.
செய்யுள்; 350
கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.
விளக்கம்;
குண்டை - குண்டாக உள்ள எருது
அறுத்துக்கொண்டு வந்த புல்லைக் கொடுத்து,
உடம்பை நன்றாகத் தேய்த்துவிட்டு
வளர்த்தாலும்
சிறிய உருவம் கொண்ட குண்டு-எருது
தேரில் பூட்டுவதற்கு உதவாது.
ஐயனே, கேள்.
செல்வம் படைத்திருந்தாலும்
கீழ்மக்களை
அவர்களின் செயலால் கண்டுகொள்ளலாம்.
COMMENTS