உலக தாய்ப்பால் வார விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக மச்சுவாடி எஸ். கே மருத்துவமனை வளாகத்தில் சங்கத் தலைவர் மருத்துவர் க.ஆறுமுகம் தலைமையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஆ.மாலதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கி பேசும்போது தாய் குழந்தையை தன்னோடு அணைத்து பாலூட்டும் பொழுது குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறது, இது அதன் மன வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் தாய்ப்பாலே குழந்தைக்கு மிகச்சிறந்த உணவு முதல் மூன்று நாட்கள் கொடுக்கும் தாய்ப்பால் மிகவும் பயனுள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் நீங்கள் கருவுற்றிருக்கும் போது அதிகரித்த எடையை குறைக்கலாம் தாய்ப்பால் கொடுப்பது ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன் வெளியாவது அதிகப்படுத்தி கருப்பையை சுருக்கம் செய்கிறது மேலும் ரத்த போக்கின் அளவை குறைக்கிறது, தாய்ப்பால் உட்கொள்ளும் பிள்ளைகள் கொளு கொளுவென இருக்கமாட்டார்கள் இதன் பருமன் பவுடர் பால் கொடுப்பதால் வருகிறது அதோடு குழந்தைக்கு தாய்ப்பால் நீண்டநாள் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும் தாய்ப்பால் மற்ற பாலைக் காட்டிலும் ஜீரணம் சுலபமாகும் எந்தவித ஒவ்வாமையும் வயிற்றுப்போக்கு வருவதை தவிர்க்கும், தாய்ப்பாலின் இம்யுநோக்ளோபின் ஏ என்கிற பொருள் பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான டி.எச்.ஏ ஆகியவை தாய்ப்பாலில் அதிகம், கலப்படம் செய்யமுடியாத ஒன்று தாய்ப்பால் ஆதலால் எந்த வித தயக்கமும் சந்தேகமும் இன்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் முதல் ஆறுமாத காலத்திற்கு ஏற்படும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தாய்ப்பால் குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் பாஸ்பரஸ் மற்றும் பிற உணவுச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன இது குழந்தைக்கு எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அவசியம் தாய் சேய்க்கு இடையே இருக்கும் பந்தம் தாய்ப்பால் ஊட்டுவதால் மேலும் வலுவடையும் தாய்ப்பால் உடல் பருமனில் இருந்தும் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய், இரத்தகொதிப்பு, சளி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்றார் நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப.செல்லத்துரை பொருளாளர் M.ஜபருல்லா கலந்து கொண்டனர் நிகழ்ச்சி அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் முகக் கவசம் அணிந்து நடத்தப்பட்டது.
COMMENTS