நாளும் ஒரு நாலடியார்
செய்யுள்; 337
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
விளக்கம்;
எறும்புகள்
தம்மால் உள்ளே நுழைய முடியாது எனத் தெரிந்தாலும்
பாத்திரத்துக்குள்ளே நெய் இருக்குமாயின்
அதனைச் சுற்றிச் சுற்றி வரும்.
அதுபோல,
இவர் எதுவும் கொடுக்கமாட்டார் எனத் தெரிந்தாலும்,
செல்வம் உடையவரை
உலகத்தவர் விடாமல் சுற்றித் திரிவர்.
செய்யுள்; 337
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
விளக்கம்;
எறும்புகள்
தம்மால் உள்ளே நுழைய முடியாது எனத் தெரிந்தாலும்
பாத்திரத்துக்குள்ளே நெய் இருக்குமாயின்
அதனைச் சுற்றிச் சுற்றி வரும்.
அதுபோல,
இவர் எதுவும் கொடுக்கமாட்டார் எனத் தெரிந்தாலும்,
செல்வம் உடையவரை
உலகத்தவர் விடாமல் சுற்றித் திரிவர்.
COMMENTS