நாள்: 16-09-2020
ஆவணி 31 புதன்கிழமை மாலை: 4:30 மணி
#தீவிரமடையும்_தென்மேற்கு_பருவமழை #தாமதமாகும்_மூன்றாவது_சுற்று #வெப்பச்சலன_மழை!
==> காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடல்பகுதி மற்றும் அதனை ஒட்டி நீடிக்கிறது. மேற்கு வடமேற்கு திசையில் தெலுங்கானா நோக்கி நகரும்.
==> மற்றொரு தாழ்வு பகுதி மியான்மர் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்ககடல் பகுதிக்கு செப்டம்பர் 20ம் தேதி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> செப்டம்பர் 20 ல் வடகிழக்கு வங்ககடல் பகுதிக்கு வரும் தாழ்வு பகுதி செப்டம்பர் 23 வரை 4 நாட்களுக்கு தென் இந்தியாவில் பருவக்காற்றை தீவிரப்படுத்தும். இதனால் கேரளா, கர்நாடாக பகுதிகளில் பருவமழை வேகமெடுக்கும். தமிழகத்தில் வெப்பச்சலன மழை ஒய்ந்திருக்கும்.
==> தமிழகத்தில் இன்று முதல் பகலில் தெளிவான வானமும், வெப்பநிலை உயர்ந்தும் காணப்படும், மாலை/இரவு வெப்பச்சலனமழை பெய்ய துவங்கும். அதாவது 16.09.2020 முதல் 18.09.2020 வரை மூன்று நாட்களுக்கு சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே ஒருசில இடங்களிலும், இதில் குறிப்பிடப்படாத மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை எதிப்பார்க்கலாம்.
==> செப்டம்பர் 19ம் தேதி முதல் வெப்பச்சலன மழை படிப்படியாக குறையும், மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் செப்டம்பர் 19 முதல் 23ம் தேதி வரை பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம்.
==================================
#டெல்டா_விவசாயிகளுக்கான_அறிக்கை!
==> திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு செப்டம்பர் 18 இரவு வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை வாய்ப்பு உள்ளது. ஆனால் கனமழையாக வோ, மாவட்டம் முழுதும் பரவலான மழை தற்சமயம் எதிர்ப்பார்க்க முடியாது. பல இடங்களை ஒதுக்கி சில இடங்களில் மட்டும் 20 முதல் 30 நிமிடங்கள் மழை பெய்யும்.
==> செப்டம்பர் 19 முதல் 23 வரை மழை வாய்ப்பு மிக குறைவு, செப்டம்பர் 24 முதல் 30ம் தேதிக்குள் மூன்றாம் சுற்று மழை பரவலாக ஒரு நல்ல மழை டெல்டாவின் அனைத்து பகுதிகளிலும் பெய்யும்.
==> எனவே நெற் பயிர்களுக்கு உடனடியா தண்ணீர் தேவைப்படும் மெனில் பாசனவசதிகொண்டோ அல்லது நீர்இறைப்பான் கொண்டோ தண்ணீர் வைக்கும் பணிகளை துவங்கலாம், உரம்வைத்தல், பூச்சி கட்டுபாட்டு நடவெடிக்கைகள் போன்ற பணிகளை பெருமழையற்ற இந்த செப்டம்பர் 19,20,21,22,23 தேதிகளில் வைத்துக்கொள்ளலாம்.
==> வடக்கு டெல்டா பகுதியில் நெல் விதைப்பு பணிகளையும் செப்டம்பர் 19 முதல் 23க்குள் செய்யலாம்.
#கொங்கு_மண்டல_விவசாயிகள்!
==> கொங்கு பகுதிகளான திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் மிதமானது முதல் சற்று கனமழை எதிர்ப்பார்க்கலாம்.
==> செப்டம்பர் 18 முதல் 23 வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், குளிர்ச்சியான சூழல் நிலவும் மழை வாய்ப்பு குறைவு. மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம்.
==> கொங்குவட்டவிவசாயிகள் இந்த வானநிலைக்கு ஏற்றார்போல் தங்கள் பணிகளை திட்டமிட்டுகொள்ளவும்
==================================
#தென்மாவட்ட_விவசாயிகள்!
==> நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 24 வரை மழை வாய்ப்பு குறைவு ஒரிரு இடங்களில் மாலை/இரவு மிதமான மழை பதிவாகலாம்.
==================================
#வடமாவட்ட_விவசாயிகள்!
==> திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற வட மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு செப்டம்பர் 18 இரவு வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை வாய்ப்பு உள்ளது. ஆனால் கனமழையாக வோ, மாவட்டம் முழுதும் பரவலாகவோ மழை எதிர்ப்பார்க்க முடியாது. பல இடங்களை ஒதுக்கி சில இடங்களில் மட்டும் 20 முதல் 30 நிமிடங்கள் மழை பெய்யும்.
==> விவாயிகள் அதற்கேற்றார் போல திட்டமிடவும்.
==================================
#மேட்டூர்அணைநிலவரம்!
==> மேட்டூர் அணை நேற்று மாலை நிலவரப்படி 93.37 அடியாகவும் அணைக்கு நீர் வரத்து 8600 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 6500 கன அடியாகவும் உள்ளது வரும் செப் 19 முதல் 23 வரை தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்லமழை எதிர்பார்க்கலாம். இதன்காரணமாக வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்த்து இம்மாத இறுதியில் மேட்டூர் அணை கணிசமான அளவு உயரும்.
==================================
#மீனவர்களுக்கான_எச்சரிக்கை!
==> வடகிழக்கு வங்ககடல் பகுதிக்கு வரும் தாழ்வுபகுதியின் காரணமாக செப்டம்பர் 19, 20, 21, 22, 23 தேதி தென்மேற்கு வங்ககடல், மத்திய மேற்கு வங்ககடல், இலங்கை ஒட்டிய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் அதனால் செப்டம்பர் 19 முதல் 23 வரை 5 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கடலை ஒட்டி 10-20 கிமீ தொலைவில் வேண்டுமானால் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்கலாம். ஆழ்கடலுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தபடுகிறது.
==================================
#தற்போதைய_வானிலை_நிலவரம்!
==> தற்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம், பிச்சவாரம், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுக்குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுவட்டாரங்களிலும் இடியுடன் கூடிய மழை. வரும் மணி நேரத்தில் பல இடங்களில் மழை எதிர்ப்பார்க்கலாம்.
நன்றி
டெல்டாவெதர்மேன் & அலையாத்தி செந்தில்
COMMENTS