ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரண்டாவது நாளாக ஆலோசனை... சிவாஜி கணேசன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் , ஜேசிடி பிரபாபகரன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் சந்தித்து ஆலோசித்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் நேற்று ஓ.பி.எஸ் ஸிடம் கேள்வி எழுப்ப முயன்ற போது தேவைப்பட்டால் அழைப்பதாக அவர் தெரிவித்தார்
இந்நிலையில், சென்னை அடையாறு சிவாஜி மணிமண்டபத்தில் நடைபெறும் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்
COMMENTS