தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சென்னையில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி, சென்னை எழும்பூர்- செங்கோட்டை , சென்னை எழும்பூர்-மதுரை, சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம், சென்னை எழும்பூர்- கொல்லம், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா,காரைக்கால்-எர்ணாகுளம் இடையே இந்த 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
COMMENTS