நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு
மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாளை காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 விதி 12-ம் படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981 விதி 25 ஆகியவற்றின் கீழ்
சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது.
COMMENTS