நாளை நீட் தேர்வு என் 95 மாஸ்க் கட்டாயம்
நீட் எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
மருத்துவ படிப்புக்கான தகுதிகான் தேர்வான நீட், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வுக்கு,மாணவர்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே வர தொடங்க வேண்டும்.
காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு தலா 90 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படுவர்.
மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்த பின் முகக் கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக் கூடாது, வெளியில் தெரியும் படியான பாட்டிலில் தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
மாணவர்கள் படிவத்தில் கையெழுத்து போடும் முன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும், வின்னாத்தாள் கொடுக்கும் முன் தேர்வு கண்காணிப்பாளர் கைகளை சுத்தம் செய்யவும், தேர்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வரக் கூடாது, எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வின் போது கட்டாயம் என் 95 மாஸ்க் அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான( 2021) நீட் தேர்வு நாளை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதனிடையே மாணவ, மாணவியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் என். 95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும்.
தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் தண்ணீர் பாட்டில் , 50 மி.லி.,சானிடைசர், உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.
மாணவர்கள் ஹால் டிக்கெட்டின் முன்பக்கத்தில் கோவிட் தொற்று குறித்த விவிரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் . நீட் தேர்வு நடைபெறும் நாளன்றுக்கு முன்னதாக 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் இருந்ததா என்பதை குறிப்பிட வேண்டும்.
பிற்பகலில் 2.00 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு, 1.30 மணிக்கு பின்னர் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்
இவை தவிர வழக்கம் போல் மாணவிகள் நகைகள் அணிந்து செல்ல, கால்குலேட்டர், மொபைல்போன் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS