இன்று சர்வதேச பெண் குழந்தை தினம்
பெண் குழந்தை
வசந்தத்தை நமக்குள்ளே
வரவழைப்பவள்
பெண் குழந்தை
இல்லாத வீடு.
ஓர் பொட்டல் காடு
பெண் குழந்தை
இருக்கும் வீடு
அது பசுமை நிறைந்த
நந்தவனம்
பூக்கள் சிரிக்கும்
பூங்காவனம்
சோம்பேறியான
மனிதனைக்கூட
உழைக்கவைக்கும்
எந்திரம்
சோர்வடைந்து
மனம் தளர்ந்தால்
புத்துணர்வு பொங்கிவர. நீ
உச்சரிக்கும் மந்திரம்
தாய்க்கும் தந்தைக்கும்
நேசம் இனைப்பவள்
தாயோடும் தந்தையோடும்
பாசம் மிகுந்தவள்
முரட்டுத்தனமான
மனிதைக்கூட
மென்மையாக
மாற்றுபவள்
முள்ளையும்
மலர வைப்பவள்
பெண் குழந்தை
உள்ள வீடு .
ஓர் சிறு கோவில்
வெள்ளிக் கொலுசுகள்
அணிந்த கலைமகள்
ஓடியாடி
விளையாடும் திருமகள்
சந்தனம் மணக்கும்
மஞ்சள் மணக்கும்
மங்களகரமாக
வீடேயிருக்கும்
பண்டிகை என்று
வந்துவிட்டால்
வீட்டில் எங்கும்
தீப ஒளிதான்
பெண் பிள்ளை
இருக்கும் வீட்டில்
நாள்தோறுமே
தீபாவளி தான்
மனம் தளர்ந்து
அமைதியிலக்கும்
வேளையிலே
மகள் முகம்
பார்த்து விட்டால்
புத்துணர்வு
பொங்கிவரும்
வாழ்வினிலே
நாத ஒலி
சலங்கை ஒலி
மங்களவாத்தியம்
இன்னிசை யாவும்
மகளின் இதழ் திறந்து
குயிலின் குரல் கலந்து
குழலின் இனிமையாக
அப்பா என்று
அழைக்கும்போது
அனைத்து இசையும்
காணாமல் போகும்
நாம் பிறந்த பிறவியின்
முழுப்பயனாக மாறும்
எத்தனை வறுமையில்
நான் இருந்தாலும்
எத்தனை செல்வம்
நான் பெற்றிருந்தாலும்
எனக்காக தனக்காக
கடைசி சொட்டு
கண்ணீர் சிந்தும்
என் பிள்ளை
அவளே பெண்பிள்ளை
இன்று சர்வதேச பெண் குழந்தை தினம்
நன்றி
இனையம்
COMMENTS