புதிய வேளாண் சட்டங்கள் கைவிடப்படும் - பிரதமர் நரேந்திர மோடி
மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்யபட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில் ஆணவத்தை அறப்போராட்டம் வென்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் கைவிடப்படும் என்ற மிகப்பெரும் தகவலை வெளியிட்டு நாட்டையே மோடி பரபரக்க செய்துள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், மோடியை விமர்சித்து எதிர்க்கட்சிகள் கருத்துக் கூறி வருகின்றன.
'' இந்திய விவசாயிகள் தங்களது அறவழி போராட்டத்தால். ஆணவத்தை அழித்துள்ளார்கள். விவசாயிகள் வாழ்க !!!
என்று கூறியுள்ளார்.
மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்
தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில்,
'' வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை மத்திய பாஜக அரசு கொடுமை செய்தது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஓய்வின்றி போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போராட்டத்தின்போது உயிரை தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Win Real Money with JackpotCity Casino - Get a 100% Bonus
ReplyDeleteJackpot City goyangfc.com Casino is an instant-play 출장마사지 and mobile casino, launched in 2017. It is 출장샵 a new worrione online gambling gri-go.com site that features slots, poker, bingo,